×

திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருவாரூர், மயிலாடுதுறை, நாகையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தஞ்சை, அரியலூர், தேனி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tiruvarur ,Mayiladuthurai ,Nagai ,Office , Chance of rain in 10 districts including Tiruvarur, Mayiladuthurai, Nagai in 3 hours: Met Office
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று...