சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நெசவாளர் காலணியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். எடப்பாடியில் இருந்து சிலுவம்பாளையம் செல்லும் சாலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். புதிய மதுபானக் கடை வராது என காவல்துறை உறுதியளித்ததை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.