சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கப்பட்டது தொடர்பாக ஐகோர்ட்டில் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அரசு நிதி செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து தொகுதி செலவுக்காக பணம் எடுக்கப்படவில்லை. வரி பாக்கியில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் விஜயபாஸ்கர் செலுத்தவில்லை என வருமான வரித்துறை புகார் அளித்துள்ளது.