ஜல்லிக்கட்டு இல்லாவிட்டால் காளைகள் படுகொலை செய்யப்படும் நிலை ஏற்படும். 2013 முதல் 2017 வரை ஜல்லிக்கட்டு தடையால் காங்கேயம், உம்பலசேரி காளைகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. உள்நாட்டு காளைகள் அழிந்து விட்டால் மிகவும் ஆபத்தானது, நாட்டு காளைகளை பாதுகாக்க ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் அக்கறை கொண்டுள்ளன என தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.