மதுரை: தூய்மை பணியாளர்கள் தொடர்பான வழக்கில் ஊரக வளர்ச்சி துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. மாற்றுப்பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்பதற்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டது. சிவகங்கை தூய்மை பணியாளர் மலைச்சாமி தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.