×

எழும்பூர், பெரம்பூர், ஆவடி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது

சென்னை: மின்சாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பொதுமக்களின் மின் துறை சார்ந்த பிரச்னைகள் மற்றும் கேள்விகள் குறித்து மின்சாரத்துறை தரப்பில் மின்நுகர்வோருக்கான குறைதீர்க்கும் கூட்டம் இயக்கம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், எழும்பூர், ஆவடி மற்றும் பெரம்பூர் உள்ளிட்ட கோட்டங்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடக்கிறது.

அதன்படி, எழும்பூர் கோட்டத்துக்கு ஓட்டேரி, மலையப்பன் தெரு, எழும்பூர் கோட்ட அலுவலகத்திலும், ஆவடி கோட்டத்துக்கு என்.எம்.ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலக 1வது தளத்திலும், பெரம்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட எம்.ஈ.எஸ். ரோட்டில் உள்ள செம்பியம் துணை மின் நிலைய வளாகத்திலும் மின் நுகர்வோருக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. எனவே, பொதுமக்கள் கூட்டங்களில் கலந்துகொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Egmore ,Perambur ,Avadi , Egmore, Perambur, Avadi, electricity consumers, Grievance meeting will be held tomorrow
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...