சென்னை: கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு டிச.5ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சோதனை அடிப்படையில் ஒரு மாத காலத்திற்கு நேரடி வகுப்புகளை நடத்தவும், ஒரு மாதத்துக்கு அப்போதைய நிலைமையை நீதிமன்றம் ஆராய்ந்து புதிய உத்தரவு பிறப்பிக்கும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.