×

திருவண்ணாமலையில் காரத்திகை தீபத் திருவிழாவையொட்டி டிச.6-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் காரத்திகை மகா தீபத் திருவிழா 06.12.2022 செவ்வாய் அன்று நடைபெறுவதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேற்படி அறிவிக்கப்பட்ட 06.12.2022 நாளை உள்ளுர் விடுமுறையாக அனுபவித்துள்ளதால் மாற்றியல் தாள்முறி சட்டம் 1881 (மத்திய சட்டம் XXVI/1881)-ன் கீழ் வரும் பொது விடுமுறை இல்லை.

எனவே மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களும், கல்வி நிறுவனங்களும் மேற்படி அறிவிக்கப்பட்ட உள்ளுர் விடுமுறைக்கு பதிலாக 17.12.2022 சனிக்கிழமை அன்று இயங்கும் என்றும் 2022 - டிசம்பர் 6 ஆம் நாளன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கரூவூலங்கள் அனைத்தும் குறைந்த பட்ச எண்ணிக்கையுடனான ஊழியர்களை கொண்டு இயங்கும் என்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்  தெரிவித்துள்ளார்.

Tags : Karathikai Deepa festival ,Tiruvannamalai , Notification of local holiday on 6th Dec on the occasion of Karathikai Deepa festival in Tiruvannamalai
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 இடங்களில்...