அரியலூர்: எங்கு திரும்பினாலும் பொக்கிஷமாக காணப்படும் மாவட்டம் அரியலூர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரியலூர் கொல்லாபுரத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் உரையாற்றினார். டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று மாற்ற ரயில் மறியல் போராட்டம் நடத்தி தலைவராக கலைஞர் உயர்ந்த மாவட்டம் அரியலூர். அரியலூர் மாவட்டம் என்பது அரிய மாவட்டம் என ஸ்டாலின் கூறினார்.