×

பரமக்குடி அருகே பிளஸ் 2 மாணவன் தற்கொலை

பரமக்குடி: பரமக்குடி அருகே பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் ராஜு (17). இவர், ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ராஜு வீட்டில் இருந்துள்ளார். அப்போது வேலைக்கு சென்ற அவரது தாயார் மாலையில் கோழியை வீட்டில் அடைக்குமாறு மகனிடம் கூறியுள்ளார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது, கோழி அடைக்காமல் இருந்துள்ளது.

இந்த ஆத்திரத்தில் ராஜுவை தாயார் கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் ராஜு இரவு 7 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அவரது தாயார் கதறியழுதார். இதுகுறித்து சத்திரக்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Paramakudi , Plus 2 student committed suicide near Paramakudi
× RELATED பரமக்குடி அருகே மர்ம கும்பல்...