×

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் தந்த விவகாரத்தில் வழங்கப்பட்ட இழப்பீட்டை முழுமையாக திரும்ப பெற ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் தந்த விவகாரத்தில் வழங்கப்பட்ட இழப்பீட்டை முழுமையாக திரும்ப பெற ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தப்பட்டபோது போலி ஆவணங்களை காட்டி ரூ.20 கோடி இழப்பீடு பெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முறைகேடாக இழப்பீடு பெற்றவர்களிடம் அதனை திரும்ப வசூலிக்கக் கோரி ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணையின்போது இதுவரை ரூ.4கோடி இழப்பீடு வசூலிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Bengaluru National Highway , ICourt orders full return of compensation given in case of land grant for Chennai-Bengaluru National Highway
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...