சென்னை: 8ம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகையை ரத்து செய்ததற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கல்வி உரிமை சட்டத்தை காரணம் கூறி ஒன்றிய அரசு நிகழ்த்தியுள்ள கொடூரத்தாக்குதல் என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். கல்வி உதவித்தொகை ரத்து செய்யப்பட்ட உத்தரவை திரும்ப பெறக்கோரி ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கடிதம் எழுதியுள்ளார்.