திருவள்ளூர்: கல்வி அனைவருக்கும் முக்கியம்; அது தரமானதாக இருக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். தேசிய கல்வி கொள்கை 2020 என்பது புரட்சிகரமானது என திருவள்ளூர் அருகே எளாவூரில் ஆளுநர் ரவி பேசினார். 1960, 1980களில் இயற்றப்பட்ட தேசிய கல்வி கொள்கையை மறுவரையரை செய்யவேண்டியது கட்டாயம் எனவும் ஆளுநர் கூறினார்.