×

மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்கள், பாதுகாப்பு வீரர்களுக்கு என் அஞ்சலி: பிரதமர் மோடி

டெல்லி: மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்கள், பாதுகாப்பு வீரர்களுக்கு என் அஞ்சலி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் அரசியல் சாசன தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அரசியல் சாசனத்தின் சிறப்புகளுடன் மும்பை பயங்கரவாத தாக்குதலையும் நினைவுகூர்ந்து பிரதமர் உரையாற்றினார். இந்தியா ஜனநாயகங்களின் தாய் என்ற தலைப்பில் அரசியல் சாசன தின நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

Tags : Mumbai terror attack ,PM Modi , Mumbai terror attack, security forces, Anjali, Prime Minister Modi
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!