ராமநாதபுரம்: நடுக்கடலில் நாட்டு படகு மீது இலங்கை கடற்படை தாக்குதல் என புகார் எழுந்துள்ளது. இந்திய கடல் எல்லைக்குள்தான் மீன்பிடித்ததாகவும் ராமேஸ்வரம் மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் இந்திய கடற்படை ரோந்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மீனவரை மற்ற மீனவர்கள் கரை சேர்த்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.