×

அருப்புக்கோட்டை அருகே பழிக்குப்பழியாக 2 பேர் சரமாரி வெட்டிக்கொலை

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உடையனம்பட்டியைச் சேர்ந்தவர் சபரி (எ) சபரிமலை (30). குலசேகரநல்லூரைச் சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன் (30). இருவரையும் கடந்த 2 நாட்களாக காணவில்லை என அவர்களது குடும்பத்தினர், திருச்சுழி காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அருகே உள்ள  பொட்டல் காட்டில் இருவரது சடலங்களும் உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் கிடந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘திருச்சுழி அருகே உடையனம்பட்டியைச் சேர்ந்தவர் ராக்கம்மாள். முன்னாள் ஊராட்சி தலைவர். இவர், தனது அக்காள் மகள் சோலைமணியை தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

சோலைமணி நாமக்கல் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவரை, அதே ஊரைச் சேர்ந்த சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு ராக்கம்மாள் திருமணம் முடித்துக் கொடுத்தார். திருமணமான சில மாதங்களில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு சோலைமணியும், மூர்த்தியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த பிரிவிற்கு ராக்கம்மாள்தான் காரணம் என எண்ணிய மூர்த்தி, கடந்த மார்ச் 12ம் தேதி வீட்டில் தனியாக இருந்த ராக்கம்மாளை, குத்தி கொலை செய்தார்.

 இதுதொடர்பாக மூர்த்தி மற்றும் அவரது தம்பி சபரிமலை, செல்வம் மற்றும் மூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் மூர்த்தி உள்ளிட்ட 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்நிலையில், சபரிமலை மற்றும் செல்வத்தின் நெருங்கிய உறவினர் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோரும், ராக்கம்மாள் கொலைக்கு பழிக்குப்பழியாக தற்போது வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளனர்.இரட்டைக் கொலை ெதாடர்பாக 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

Tags : Aruppukkottai , Aruppukkottai, Palikkuppazhi, 2 persons barrage butchery
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...