×

நடிகைகள் பற்றி அவதூறு திமுக பேச்சாளரை கைது செய்ய தடை

சென்னை: நடிகைகள் பற்றி அவதூறு பேசிய திமுக பேச்சாளரை கைது செய்ய கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் அக்டோபர் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., பேச்சாளர் சைதை சாதிக், நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து பேசினார். இதுகுறித்த புகாரின்பேரில் சைதை சாதிக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ”பெண்களை பற்றி அவதூறான கருத்துகளை இனிமேல் பேச மாட்டேன் என்று அவர் பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும். அதில் சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும் அதுவரை சாதிக்கை கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்டார்.

Tags : DMK , Ban on arresting DMK speaker for defaming actresses
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...