புதுக்கோட்டை: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில் இருபிரிவினராக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். மது போதையில் கல்லூரி மாணவர்கள் தாக்கி கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மோதல் சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை நகர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.