×

6 பல்கலைக்கழகங்களில் டிசம்பர் மாதத்திற்குள் சமூக நீதிக் கண்காணிப்புக் குழு ஆய்வு மேற்கொள்ள முடிவு

சென்னை: 6 பல்கலைக்கழகங்களில் டிசம்பர் மாதத்திற்குள் சமூக நீதிக் கண்காணிப்புக் குழு ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. ”சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் 5-வது கூட்டம் 21.11.2022 அன்று சென்னை, அண்ணா சாலை, தேவநேயப் பாவாணர் கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள சமூக நீதிக் கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் குழுவின் தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

சமூக நீதிக் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக் கழகம் ஆகிய 6 பல்கலைக்கழகங்களில் 2022 டிசம்பர் மாதத்திற்குள் சமூக நீதிக் கண்காணிப்புக் குழு ஆய்வு மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது.

Tags : Social Justice Monitoring Committee , The Social Justice Monitoring Committee has decided to conduct a survey in 6 universities by December
× RELATED 6 பல்கலைக்கழகங்களில் டிசம்பர்...