சென்னை : தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை மின்னணு முறையில் நடத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. காஞ்சிபுரம் மருத்துவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு, மருத்துவ கவுன்சில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில் தபால் வாக்குமுறையை தொடர அவசியமில்லை என மனு அளிக்கப்பட்டது.