சென்னை: புதுச்சேரியில் அரசு பணி நியமனங்களின் போது தேர்வு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறுவது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். பட்டதாரி இளைஞர் அய்யாசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டது.