சென்னை : காங்கிரஸ் கட்சி என் மீது என்ன ஒழுங்கு நடவடிக்கை எடுத்தாலும் கட்டுப்படுவேன் என தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபிமனோகரன் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களும் நேரடியாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமைக்கு தெரியும் என அவர் கூறினார். சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் தொடர்பாக கட்சியில் இருந்து தற்காலிகமாக நேற்று ரூபிமனோகரன் நீக்கப்பட்டார்.