×

இலங்கையில் போதை பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை: புதிய சட்டம் அமல்

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 19ம் தேதி போதை பொருள் தடுப்பது குறித்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன திருத்தப்பட்ட மசோதாவை அறிமுகப்படுத்தினார். அதில், 5 கிராமுக்கு அதிகமான ஐஸ் ரக போதை பொருளை வைத்திருந்தாலோ, விற்பனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, புதிய சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின்படி ஐஸ் போதை பொருளை வைத்திருந்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும். 


Tags : Sri Lanka , Sri Lanka, death penalty for possession of drugs, new law comes into effect
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்