×

நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: சென்னை மாநகராட்சியின் 165வது வார்டு கவுன்சிலரும் தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். தம் பகுதி மக்களின் தேவைகளுக்காக முன்னின்று அவர்களின் நன்மதிப்பையும் அன்பையும் பெற்றவர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர், காங்கிரஸ் பேரியக்கத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,M.K.Stal ,Ishwara Prasad ,Nanji , Condolence of Chief Minister M.K.Stal on death of Ishwar Prasad in Nanji
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...