×

பராமரிப்பால் 4 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தம்

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மீஞ்சூரில் உள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நாளை காலை 6 மணி முதல் வரும் 28ம்தேதி காலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, மாற்று ஏற்பாடாக, மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும். லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள பொறியாளர்களை தொடர்பு கொள்ளலாம். பகுதி-1க்கான பொறியாளரை 81449 30901 என்ற எண்ணிலும், பகுதி-2க்கான பொறியாளரை 81449 30902 என்ற எண்ணிலும், பகுதி-3க்கான பொறியாளரை 81449 30903 என்ற எண்ணிலும், பகுதி-4க்கான பொறியாளரை 81449 30904 என்ற எண்ணிலும், தலைமை அலுவலகத்தை 044-4567 4567 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.


Tags : Production shutdown for 4 days due to maintenance
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...