திருவள்ளூர்: வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் போன்றவற்றிக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் 01-01-2023 தேதியன்று 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ம், பெயர் நீக்கம் செய்ய விரும்புபவர்கள் படிவம் 7-ம், வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்துப்பிழைகள் முகவரி மாற்றம் தொகுதி மாற்றம் முதலியவற்றுக்கு படிவம் 8-ம், தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள நியமிக்கப்பட்டுள்ள இடங்களான வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளில் வருகின்ற டிசம்பர் மாதம் 8-ம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் படிவங்கள் அளிக்கலாம்.