வியட்நாம்: வியட்நாம் கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர் சுந்தரலிங்கம் கிரிதரன் தற்கொலை செய்துகொண்டார். நவம்பர் 5ம் தேதி நடுக்கடலில் தவித்த 303 இலங்கை தமிழர்கள் மீட்கப்பட்டு வியட்நாமில் தங்க வைக்கப்பட்டனர். ஐ.நா. விடம் ஒப்படைக்க கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கிருமிநாசினி குடித்து சுந்தரலிங்கம் தற்கொலை செய்துகொண்டார்.