செங்கல்பட்டு: நான் ஒருநாளும் பணத்தை எதிர்பார்ப்பவன் கிடையாது என பாரிவேந்தர் எம்.பி. தெரிவித்திருக்கிறார். தமிழ் பேராய விருதுகள் விழாவில் உரையாற்றிய பாரிவேந்தர், முறையாக குழு அமைக்கப்பட்டு விருது வழங்கப்படுகிறது. தமிழருவி மணியன் கொள்கைப்பிடிப்புடையவராக திகழ்கிறார். பணத்தின் மீது எனக்கு பற்று கிடையாது. உதவிக்காக யாரிடத்திலும் நான் கைகட்டி நின்று காரியத்தை சாதித்தவன் அல்ல என தெரிவித்தார்.