×

மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு வேலைகளில் 4% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு வேலைகளில் 4 சதவீதம்  இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டு முதல்வர் உரையாற்றினார். அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு தொகை 2000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க ஆணையிடப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் கூறினார்.


Tags : Chief Minister ,M.K.Stal , Disabled Persons, Govt Jobs, 4% Reservation, M.K.Stalin
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...