×

நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!

இந்தூர்: இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியுடன் இணைந்து பிரியங்கா காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் 7ம் தேதி தமிழ்நாடு கன்னியாகுமரியில், பாதயாத்திரையை தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் என தற்போது மத்தியபிரதேசத்தில் பாதயாத்திரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று மத்தியபிரதேசம் வந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்தியபிரதேசத்தில், ராகுல்காந்தி பாதயாத்திரை 12 நாட்கள் நடக்கிறது.

இன்று 78வது நாளாக மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இந்திய ஒற்றுமை பயணம் மீண்டும் தொடங்கியது. இந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் இணைந்து நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில்; நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. இன்று யாத்திரையின் ஒருபகுதியாக சுதந்திரப் போராட்ட வீரரும் பழங்குடியின தலைவருமான தன்தியாபீ நினைவிடத்திற்கு செல்கின்றனர். பின்னர் அங்கிருந்து கார்கோன் செல்கின்றனர்.

Tags : India , The steps are stronger when we walk together; Brother - sister who joined the Indian unity trip..!
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...