திருவாரூர்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் 2வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் தர கோரியும், காலியிடங்களை நிரப்பக்கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 866 ஊழியர்கள் 2வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.