×

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேக் தயாரிக்கும் ஆவின் நிறுவனம்: 4 வகையான கேக் நவம்பரில் அறிமுகம்

சென்னை: பால், இனிப்பு வகைகளை தொடர்ந்து, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேக் வகைகளை அறிமுகம் செய்ய உள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆவின் பொருட்கள் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆவின் நிறுவனத்துக்கு சுமார் 4.5 லட்சம் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்த பால் மூலம் பால் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது.

ஆவின், மாநிலம் முழுவதும் 27 ஒன்றியங்கள் வாயிலாக சுகாதாரமான முறையில் 225 வகையான பால் பொருட்களை தயாரித்து வருகிறது. ஏற்கனவே தீபாவளி, ஆயுதப்பூஜை பண்டிகையை ஒட்டி இனிப்பு வகைகளை விற்பனை செய்தது. இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டையை முன்னிட்டு புதிய வகை கேக் 4 ரகங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  கிறிஸ்துமஸ் கேக் எனப்படும் பிளம் கேக்,  வெண்ணிலா, சாக்லேட் உட்பட 4 வகையான பிளேவர்களில் கேக் அறிமுகமாகிறது.

இந்த மாதமே விற்பனைக்கு கொண்டுவர ஆவின் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பால், இனிப்பு வகைகள், ஐஸ்கீரிம் தொடர்ந்து தற்போது கேக் வகைகளை அறிமுகம் செய்யவுள்ளது.

Tags : Awin ,Christmas , Aavin, a cake maker, has introduced 4 types of cakes in November for the Christmas festival
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...