×

சென்னை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு வாழ்த்து

சென்னை: சென்னை மாவட்ட குழுவின் தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன், உறுப்பினர்களாக ஆர்.வெற்றிவீரன், வி.சாவித்திரிதேவி, வி.விஜய வெங்கடேசன், பி.ஜெ.பாஸ்கர் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள கே.எஸ்.இரவிச்சந்திரன் மற்றும் உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டம் 1959, சட்டப்பிரிவு 7A –ன் கீழ், சென்னை வருவாய் மாவட்ட எல்லைக்குட்பட்ட சட்டப்பிரிவு 46(iii) –ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட சமய அறநிறுவனங்களைத் தவிர மற்ற சமய அறநிறுவனங்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை (Non Hereditary Trustees) நியமனம் செய்திட தலைவர் மற்றும் 4 உறுப்பினர்களை கொண்ட மாவட்ட குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட குழுவின் தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கே.எஸ்.இரவிச்சந்திரன், உறுப்பினர்களாக ஆர்.வெற்றிவீரன், வி.சாவித்திரிதேவி, வி.விஜய வெங்கடேசன், பி.ஜெ.பாஸ்கர் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (23.11.2022) சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன், ஆகியோர் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள கே.எஸ்.இரவிச்சந்திரன் மற்றும் உறுப்பினர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்ததோடு, அவர்களின் பணிகள் குறித்தும், சென்னை மாவட்டத்திலுள்ள பழமையான திருக்கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமனம் செய்தல், திருக்கோயில்களின் திருப்பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தினார்கள்.

இந்நிகழ்வில் கூடுதல் ஆணையர்கள் இரா.கண்ணன், ந.திருமகள், சென்னை மண்டல இணை ஆணையர்கள் முனைவர் ந.தனபால், கே.ரேணுகாதேவி, உதவி ஆணையர் எம்.பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Chennai District Trustee Committee ,Minister ,B. K. Greeting Segarbabu , Chennai District Board of Trustees Chairman and Members Nomination: Minister Greetings PK Shekharbabu
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...