குன்னூர் : குன்னூர் மலை ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ், காட்டேரி பூங்கா உள்ளிட்ட பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனுக்காக மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டது. அவற்றை காண தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
ஆனால் கடந்த சில தினங்களாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பயணிகள் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்பட்டு வந்தது. தற்போது கால நிலை மாறி உறைபனி விழ துவங்கியுள்ளது. மழை இல்லாததால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. குன்னூர் மலை ரயில் நிலையங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.