×

காதல் தோல்வியால் விரக்தி ஒளிப்பதிவாளர் தற்கொலை

பல்லாவரம்: காதல் தோல்வியால் மன உலைச்சலில் இருந்த சினிமா உதவி ஒளிப்பதிவாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாங்காடு அடுத்த மதனந்தபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் விக்னேஷ் (22). இவர், சினிமா துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த, சில மாதமாக இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை  காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இவரின் காதலை அந்த பெண் நிராகரித்துவிட்டதாக தெரிகிறது.

இதனால், விரக்தியடைந்த விக்னேஷ், கடந்த சில தினங்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மேலும், வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், நேற்று முன்தினம் இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே, நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு விக்னேஷ் தூக்கிட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து, உடனடியாக மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்தது, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்த விக்னேஷ் உடலை மீட்டு,  பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Love failure, cinematographer, suicide
× RELATED சென்னையில் ஆன்லைன் ரம்மி...