×

வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்ஐக்கு அடி உதை: போதை ஆசாமி கைது

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர், திருமங்கலம், அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு மற்றும் நொளம்பூர் பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி, தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள், போதையில் வாகனம் ஒட்டி வருபவர்கள் மற்றும் காரில் சீட்டு பெல்ட் அணியாமல் வருகின்றவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் பாலம் அருகே, திருமங்கலம் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் தங்கராஜ் (50) தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்னர்.

அப்போது, போதையில் பைக்கில் வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து, பரிசோதனை கருவி மூலம் அவரை சோதனை செய்தனர். அதில், அவர் போதையில் இருப்பது உறுதியானது.   இதனால், அவருக்கு ரூ.10 ஆயிரம்  அபராதம் விதிக்க முயன்றனர்.  அப்போது அந்த நபர், ‘‘எதற்காக எனது வாகனத்தை மறிக்கிறீர்கள். என்னால் அபராதம் செலுத்த முடியாது,’’ என்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, உதவி ஆய்வாளர் தங்கராஜ், ‘‘நீ மது அருந்திவிட்டு பைக் ஓட்டி வந்துள்ளதால், அபராதம் செலுத்திவிட்டு, பைக்கை எடுத்துச் செல்,’’ என்று கூறிவிட்டு, பைக் சாவியை எடுத்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர் திடீரென தங்கராஜை சரமாரியாக தாக்கிவிட்டு, மின்னல் வேகத்தில் பைக்கில் ஏறி அங்கிருந்து தப்பியுள்ளார். இதுகுறித்த புகாரின்படி, திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவு மூலம் விசாரித்தனர். அதில், அரும்பாக்கம் பகு தியை சேர்ந்த லூர்து வர்மன் (29) என்பவர் எஸ்ஐயை தாக்கிவிட்டு தப்பியதுெதரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.


Tags : SI , Vehicle search, SI kicked, drug suspect arrested
× RELATED போதையில் நண்பர்களுடன் எஸ்ஐயை தாக்கிய விஏஓ