×

பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர்கள் நீக்க விவகாரம் தனி நீதிபதியின் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும்: ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளுக்கு சொந்தமான உதவி பேராசிரியர்கள் பணி நியமனம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை நிறுத்தி வைத்து, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான பல்வேறு கல்லூரிகளில் 2013 முதல் 2015ம் ஆண்டுகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதால், அதுகுறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கல்லூரிகளில் 254 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, அவர்களின் நியமனத்தை செல்லாது என அறிவித்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு எதிராக உதவி பேராசிரியர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,  எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இயற்கை நீதிக்கு எதிரானது என கூறினர். நாங்கள் போதிய தகுதியை பெறவில்லை எனக்கூறுவது தவறு எனக்கூறிய மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், பல்கலைக்கழகமும், அரசும் எங்களது தேர்வு முறையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறினர்.

பச்சையப்பன் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 152 உதவி பேராசிரியர்கள் போதிய தகுதியை பெற்றிருக்கவில்லை என கூறினார். அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நீதிமன்றம் உத்தரவிட்டதாலேயே உதவி பேராசிரியர்களின் கல்வி தகுதியை ஆய்வு செய்து அறிக்கை அளித்ததாக கூறினார். இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் நடத்திய விசாரணையில் 150 உதவி பேராசிரியர்களின் வெயிடேஜ் மதிப்பெண்ணில் மட்டுமே தவறு நிகழ்ந்துள்ளது. ஆசியர்களின் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக உறுதி ஆகாத நிலையில் 254 உதவி பேராசியர்களின் பணி நியமனத்தை ஒட்டு மொத்தமாக ரத்து செய்த தனி நீதிபதியின்  உத்தரவு நிலைக்கத்தக்கல்ல எனக்கூறி வழக்கின் இறுதி விசாரணை முடியும் வரை தனி நீதிபதியின் உத்ததரவு நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags : Chachjayappan College ,iCourt , Pachaiyappan College assistant professors removal case to stay single judge's order: ECtHR two-judge bench orders
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு