×

கனவு இல்ல திட்டத்தில் பத்து தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என்று கனவு இல்ல திட்டத்தை முதல்வர் அறிவித்தார்.  2022-2023ம் ஆண்டிற்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ், சாகித்ய அகாதமி விருது பெற்ற ஜி.திலகவதி, கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது பெற்ற பொன்.கோதண்டராமன், சாகித்ய அகாதமி விருது பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது பெற்ற ப.மருதநாயகம், மறைமலை இலக்குவனார், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது பெற்ற  இரா.கலைக்கோவன், சாகித்ய அகாதமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன், 2016ம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது பெற்ற கா.ராஜன், சாகித்ய அகாதமி விருது பெற்ற ஆர்.என்.ஜோ.டி.குருஸ், 2016ல் சாகித்ய அகாதமி விருது பெற்ற வண்ணதாசன் ஆகிய 10 தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் வீடுகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : 10 Tamil Writers Selected for Dream Home Project
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...