கூடலூர்: நீலகிரி மாவட்ட பாஜ துணை தலைவராக இருந்தவர் கங்காதரன். இவர் தனது பதவியை ராஜினாமா செய்து மாநில தலைவர் அண்ணாமலைக்கு கடிதம் அனுப்பி உள்ளார். கடிதத்தில், நான் கூடலூர் பகுதியில் வசிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மவுண்ட்டாடன் செட்டி பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவன். கடந்த 35 ஆண்டுகளாக கட்சியில் உள்ளேன். மக்கள் பிரச்னைகளையும், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்களையும் கண்டுகொள்ளாத தலைமையின் கீழ் பணிபுரிய விருப்பமில்லை என்று அவர் கூறியுள்ளார்.