×

3வது போட்டி மழையால் டை; நியூசிலாந்துக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி

நேப்பியர்: நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி - 20 கிரிக்கெட் போட்டி மழையால் டை ஆனதால் இந்தியா தொடரை வென்றது. நேப்பியரில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மழையால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இரு அணிகளும் ஒரே ஸ்கோர் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் டி20 தொடரில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2-வது டி20 போட்டியில் இந்திய அணி சூர்யகுமார் யாதவின் அதிரடியான சதத்தால் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து கடைசி மற்றும் இறுதி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் இன்றைய போட்டியில் இடம்பெறாததால் டிம் சவுதி அணியை வழிநடத்துகிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன், டெவோன் கான்வே களமிறங்கினார்கள். ஃபின் ஆலன் 3 ரன்னிலும் அடுத்து வந்த மார்க் சாப்மேன் 12 ரன்னிலும் அவுட்டாகியதால் நியூசிலாந்து அணி தடுமாறியது. கான்வே மற்றும் கிளன் பிலிப்ஸ் பார்ட்னர்ஷிப் ரன்ரேட்டை உயர்த்தினர்.

கிளன் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 54 ரன்கள் விளாசி சிராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். மறுபுறம் நிதானமாக விளையாடிய கான்வே 59 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி வந்ததால் இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடி பெரிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயப்பார்கள் என்று எதிர்பாரக்க்கப்பட்டது. ஆனால் இறுதி ஓவர்களில் சிராஜ் மற்றும் ஹர்ஸ்தீப் சிங் பிரமாதமாக பந்துவீசி நியூசிலாந்து வீரர்களை அடுத்தடுத்து பெவிலியன் அனுப்பினார்கள். சிராஜ் மற்றும் ஹர்ஸ்தீப் சிங் தலா 4 விக்கெட்களை கைப்பற்றினர்.

இதனால் நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 160 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்கம் மந்தமாகவே இருந்தது. இஷான் கிஷான் (10), ரிஷப் பந்த் (13), சூர்யகுமார் யாதவ் (13), ஷ்ரேயாஸ் ஐயர் (0) ரன்களில் அவுட்டாகினர். ஆனால் இந்திய அணியின் கேப்டன் பாண்டியா அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 30 ரன்கள் விளாசி இருந்தார். இந்திய அணி 9 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. மழை விடாமல் பெய்ததால் DLS முறைப்படி ஆட்டம் டிரா என அறிவிக்கப்பட்டது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Tags : India ,T20 ,New Zealand , 3rd match tied by rain; India won the 3-match T20 series against New Zealand by 1-0
× RELATED நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த...