×

வரும் 28, 29ம் தேதிகளில் திருச்சி, அரியலூர், பெரம்பலூருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை; அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

ஜெயங்கொண்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 28, 29ம் தேதிகளில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்காக சென்னையில் இருந்து வரும் 28ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானத்தில் திருச்சி வருகிறார். அங்கிருந்து, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காகித ஆலை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

தொடர்ந்து அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில்  நடைபெறும் அகழாய்வு பணிகள் மற்றும் அதில் கிடைத்த பொருட்களை முதல்வர் பார்வையிடுகிறார். பின்னர் 29ம் தேதி அரியலூரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அடுத்ததாக பெரம்பலூர் மாவட்டத்துக்கு செல்லும் அவர், அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : CM ,Stalin ,Trichy ,Ariyalur ,Perambalur , CM Stalin's visit to Trichy, Ariyalur, Perambalur on 28th and 29th; Participation in government programs
× RELATED நாடு காக்க; நாளைய தலைமுறை காக்க;...