×

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரியில் 254 உதவி பேராசிரியர்கள் நீக்கத்துக்கு ஐகோர்ட் தடை

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரியில் 254 உதவி பேராசிரியர்கள் நீக்கத்துக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. நீதிபதி சண்முகம் நடத்திய விசாரணையில் 150 உதவி பேராசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் மட்டுமே தவறு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரியில் பணிபுரியும் 254 பேராசிரியர்களின் நியமனம் செல்லாது என ஐகோர்ட் நேற்று தீர்ப்பு அளித்தது.

254 பேராசிரியர்கள் பணி நியமனத்தை ஒட்டு மொத்தமாக ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்தது. பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமாக 6 கல்லூரிகள் உள்ளன. குறிப்பாக பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி கல்லூரி, செல்லம்மாள் கல்லூரி என கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் கடந்த 2013 முதல் 2015 ஆண்டில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதால் அதைபற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கல்லூரிகளில் பணிபுரியும் 254 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி நியமனம் செல்லாது என அதிரடியான அறிவிப்பை வெளியீட்டிருந்தார். இந்த அறிவிப்பை எதிர்த்து இரு நீதிபதி அமர்வு முன் முறையீடு செய்யப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் பாதிக்கப்பட்ட பேராசிரியர்கள் பணிநீக்கம் உத்தரவு தொடர்பான வழக்கறிஞர்கள் தங்களுடைய தரப்பு வாதங்களை கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதாகவும் இது இயற்கை நீதிக்கு எதிரான தீர்ப்பு என்றும் அவர்கள் சுட்டிகாட்டினார்கள்.

தாங்கள் போதிய தகுதி பெறவில்லை எனக்கூறுவது தவறு எனக்கூறிய மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் பல்கலைகழகமும் அரசும் எங்கள் தேர்வுமுறைகளை ஏற்று கொண்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள். மேலும் பச்சையப்பன் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் 152 உதவி பேராசிரியர்கள் போதிய தகுதி பெறவில்லை என்று தெரிவித்தார். அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாலேயே உதவி பேரசிரியரின் கல்வி தகுதி ஆய்வு செய்து அறிக்கை வெளியீட்டதாக அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சண்உகம் நடத்திய விசாரணையில் 150 பேராசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் மட்டுமே தவறு நடந்துள்ளது. 254 பேராசிரியர்கள் பணி நியமனத்தை ஒட்டு மொத்தமாக ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு நிலைக்கத்தக்கதல்ல என இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. உதவி பேராசிரியர்களின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு தடைவிதித்து உத்தரவிட்டது.

Tags : Pachaiyappan Trust College , Court prohibits removal of 254 assistant professors in Pachaiyappan Trust College
× RELATED நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி செயல்பட...