×

மேகதாது அணை குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கோரிக்கை

டெல்லி: மேகதாது அணை குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேகதாது வழக்கில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கலாம் என்ற ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்தை ஏற்க முடியாது. உச்ச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை மேகதாது குறித்து விவாதிக்க தடை வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


Tags : Meghadatu Dam ,Cauvery Commission ,Tamil Nadu Government ,Supreme Court , Meghadatu Dam, Cauvery Commission Meeting, Government of Tamil Nadu
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...