மதுரை : தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 180% அதிகரித்தது வேதனை அளிக்கிறது என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. குழந்தை தொழிலாளர்கள் முறையை முற்றிலுமாக ஒழிக்க ஒன்றிய, மாநில அரசுகளின் நடவடிக்கை தேவைப்படுகிறது. எனவே, தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பை தடுக்க கோருவது பற்றி ஒன்றிய, மாநில அரசுகள் பதில் தர மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது.