சென்னை : தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். முதுபெரும் தமிழறிஞர் மற்றும் தமிழாசிரியச் சேவையின் பல்வேறு நிலைகளில் இடையறாது அவ்வை நடராசன் பணியாற்றியவர். எண்ணற்கரிய தமிழ் மாணாக்கர்களையும், முனைவர்களையும் உருவாக்கிய பெரும்பேராசிரியர் அவ்வை நடராசன் என அவர் கூறினார்.