சென்னை: அவ்வை நடராசனின் பிரிவு தமிழ் உலகத்திற்கே பேரிழப்பாகும் என பாரிவேந்தர் எம்.பி. தெரிவித்துள்ளார். கம்பீரமான குரலால் கேட்பவர் உள்ளங்களை பிணித்து வைக்கும் பேராற்றல் அவ்வை நடராசனுக்கு உண்டு. அவ்வை நடராசன் பங்கேற்காத இலக்கிய அமைப்புகளே தமிழகத்தில் இல்லை என பாரிவேந்தர் எம்.பி. புகழாரம் சூட்டியுள்ளார்.