×

சென்னையில் இருந்து 23ம் தேதி முதல் சபரிமலைக்கு சிறப்பு ரயில்: கோவை வழியாக இயக்கம்

சென்னை: சென்னையில் இருந்து கோவை வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில் நாளை மறுநாள் (23ம் தேதி) முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் (06061) வரும் 23 ம் தேதி முதல் 2023-ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமை அன்று இயக்கப்படும். அதே போல் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பிற்பகல் 3:30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6:15 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

அதேநேரம், மறுமார்க்கமாக சிறப்பு ரயில் (06062) கொல்லத்தில் இருந்து காலை 8:45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 03:50 மணிக்கு சென்னையை வந்தடையும். வரும் 24ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வரை வாரத்தில் வியாழக்கிழமை நாட்களில் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாஸ்சேரி, திருவாலா, செங்கனூர், மாவேலிகாரா, காயம்குளம், சாஸ்தான்கோட்டா ஆகிய நிலையங்களில் ரயில் நின்று செல்லும். இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,Sabarimala ,Coimbatore , Special train from Chennai to Sabarimala from 23rd: Operation via Coimbatore
× RELATED அண்ணாமலை போட்டியிடும் கோவைக்கு மட்டும் ஐபிஎஸ் இல்லாத எஸ்பியை நியமிப்பதா?