×

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர கார்த்திகை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது-திரளான பக்தர்கள் தரிசனம்

திருமலை :  திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர கார்த்திகை பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக திருப்பதி அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர கார்த்திகை பிரமோற்சவம் நேற்று காலை  கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலையில் கொடிமரத்திற்கு அபிஷேகமும், 9.30 மணி முதல் 9.45 மணிக்கு இடையே தங்க கொடிமரத்தில் பத்மாவதி தாயாரின் பிரமோற்சவ கொடியேற்றமும் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இரவு 7 மணி முதல் 10 மணிக்கு இடையே பிரமோற்சவத்தின் முதல் வாகன புறப்பாடாக தாயாரின் சின்ன சேஷ வாகன சேவை நடந்தது. இதில், திருமலை திருப்பதி தேவஸ்தான இணை செயல் அதிகாரி சதா பார்கவி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags : Karthikai Pramotsavam ,Tiruchanur Padmavathi Taiar Temple , Tirumala: The annual Karthikai Brahmotsavam at Tiruchanur Padmavathi Mother Temple started yesterday with flag hoisting.
× RELATED திருச்சானூர் கோயிலில் கார்த்திகை...