சென்னை: சென்னை திருவான்மியூர் அருகே பழங்கால சிலைகளை விற்க முயன்ற சுரேந்திரா என்ற தரகர் கைது செய்துள்ளனர். 15 சிலைகள் பறிமுதல் செய்துள்ளனர். நடராஜன், அம்மன், புத்தர், விநாயகர் உள்ளிட்ட 15 சிலைகளை பறிமுதல் செய்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பழங்கால சிலைகளை தரகர் விற்கவுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.