×

திருவட்டார் அருகே 8 பேர் காயம் கார் ஓட்டிய சிறுவன் மீது வழக்கு

குலசேகரம்: குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தையை சேர்ந்தவர் ஐயப்பன் ஆசாரி. அவரது மகன் அஜித்குமார் (29). ராணுவ வீரர். அவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று மனைவி மற்றும் நண்பரான குளச்சல் சாஸ்தான் கரையை சேர்ந்த 17 வயது சிறுவனுடன், காரில் திருவட்டாரை அடுத்த கொல்வேல் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளார்.

அங்கு மனைவியை விட்டு விட்டு 17 வயது சிறுவன் மற்றும் உறவினர்களுடன் திற்பரப்பு அருவிக்கு சென்றுள்ளனர். மதியம் 2.30 மணியளவில் கொல்வேல் பகுதிக்கு காரில் திரும்பி வந்தனர். காரை 17 வயது சிறுவன் ஓட்டியதாக கூறப்படுகிறது. கல்லடிமாமூடு பகுதியை கடந்து, புலியிறங்கி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த தள்ளுவண்டி கடை மீது மோதியது. இதில் கடையில் இருந்த பிரகாஷ் (35), அந்த பகுதியில் நின்ற விளவங்கோடு ரொனால்டு ஜெபா, காரில் வந்த ராணுவ வீரர் அஜித்குமார், காரை ஓட்டிய சிறுவன் உட்பட 7 பேர் காயமடைந்தனர். காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக 17 வயது சிறுவன் மீது திருவட்டார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Thiruvattar , 8 injured, accident, case against boy driving car
× RELATED திருவட்டார் அருகே கல் ஏற்றி வந்த டெம்போ பறிமுதல்